பல்லவி
தீ3ன ஜனாவன ஸ்ரீ ராம தா3னவ ஹரண ஸ்ரீ ராம
வீன விமான ஸ்ரீ ராம மீன ஸ1ரீர ஸ்ரீ ராம
சரணம்
சரணம் 1
நிர்மல ஹ்ரு2த3ய ஸ்ரீ ராம 1கார்முக பா3ண ஸ்ரீ ராம
ஸ1ர்ம ப2ல ப்ரத3 ஸ்ரீ ராம கூர்மாவதார ஸ்ரீ ராம (தீ3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தீ3ன ஜன/-அவன/ ஸ்ரீ ராம/ தா3னவ/ ஹரண/ ஸ்ரீ ராம/
தீனரை/ காக்கும்/ ஸ்ரீ ராமா/ அசுரரை/ அழித்த/ ஸ்ரீ ராமா/
வி/-இன/ விமான/ ஸ்ரீ ராம/ மீன/ ஸ1ரீர/ ஸ்ரீ ராம/
பறவை/ யரசன்/ வாகனனே/ ஸ்ரீ ராமா/ மீன்/ உருவோனே/ ஸ்ரீ ராமா/
சரணம்
சரணம் 1
நிர்மல/ ஹ்ரு2த3ய/ ஸ்ரீ ராம/ கார்முக/ பா3ண/ ஸ்ரீ ராம/
தூய/ இதய/ ஸ்ரீ ராமா/ அம்பு/ வில் (ஏந்தும்)/ ஸ்ரீ ராமா/
ஸ1ர்ம/ ப2ல/ ப்ரத3/ ஸ்ரீ ராம/ கூர்ம/-அவதார/ ஸ்ரீ ராம/ (தீ3)
மகிழ்ச்சி/ பயன்/ அருளும்/ ஸ்ரீ ராமா/ ஆமை/ அவதாரமே/ ஸ்ரீ ராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - த3ஸ1ரத2 நந்த3ன - த3ஸ1ரத2 தனய.
Top
மேற்கோள்கள்
1 - கார்முக - வில்லுக்கு, சாப, கார்முக, தனுஸ், கோதண்ட என்ற பல பெயர்கள் உண்டு. கார்முகம் எனும் வில், க்ருமுக மரத்தினின்றும் தயாரிக்கப்படுவது.
3 - கலி மல - கலியின் மலங்கள் - இவை எவையெவையென பாகவத புராணத்தினில் (12-வது புத்தகம், 2-வது அத்தியாயம்) நோக்கவும்.
Top
4 - ஹய முக2 - குதிரை முக உருவம். கல்வியின் உருவாகக் கருதப்படும், மறைகளை மீட்பதற்காக எடுக்கப்பட்ட, விஷ்ணுவின் அவதாரம். ஆனால் தசாவதாரம் என்று கூறப்படும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுவதில்லை.
மறைகளைக் கவர்ந்து சென்றது, 'சோமகன்' எனப்படும் சோமகாசுரன் என்றும், 'ஹயக்ரீவ' என்னும் குதிரைமுக அரக்கனென்றும், மது-கைடபர்கள் என்றும், மறைகளை மீட்டது விஷ்ணுவின் மீன் அவதாரத்தில் என்றும், 'ஹயக்ரீவ' என்ற குதிரை முக அவதாரத்தில் என்றும் முரண்பாடான கருத்துகள் பாகவத புராணத்தினில் காணப்படுகின்றன. பாகவத புராணம் 5.18 மற்றும் பாகவத புராணம் 8.24 நோக்கவும்.
Top
விளக்கம்
தியாகராஜர், தமது 'ஸ்1யாம ஸுந்த3ராங்க3' என்ற கீர்த்தனையிலும், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் முன்னுரையிலும், இராமனை, தனது 'மனதிற்குகந்த தெய்வம்' என்று குறிப்பிடுகின்றார். அதனால்தானோ என்னவோ, விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் புகழும் இந்தப் பாடலில், தியாகராஜர் ஒவ்வோர் அடியிலும் 'ஸ்ரீ ராம' என்று குறிப்பிடுகின்றார்.
இப்பாடலில் 'கல்கி அவதாரம்' குறிப்பிடப்படவில்லை. அத்துடன், விஷ்ணுவின் பத்து அவதாரங்களில், 'பூர்ணாவதாரம்' என்று கருதப்படும் 'கிருஷ்ணாவதார'த்தினைக் குறிப்பிடாதது வியக்கத்தக்கதாகும். 9-வது சரணத்தில், 'விஜயன் தேரோட்டி' என்று கூறியிருந்தாலும், கிருஷ்ணனின் பெயர் காணப்படவில்லை. தியாகராஜர், இராமனை 'பரிபூர்ணாவதார' என்று தமது 'ரகு4பதே ராம' என்ற ஸ1ஹான ராகக் கீர்த்தனையில் குறிப்பிடுகின்றார்.
Top
பறவையரசன் - கருடன்
பத்துத் தலையன் - இராவணன்
கலி - கலியுகம்
விஜயன் - அர்ஜுனன்
Top